விவிலியம் அன்றாட வாழ்வில் இடம் பெற வேண்டும் .23 அக்டோபர் 08 .
விவிலியம் தினமும் வாழ்வில் இடம் பெறுவது பற்றிக் கூறிய பிலிப்பைன்ஸ் நாட்டு ஆயர் லூயிஸ்
டாலே எளிதான முறையில் , நடைமுறைக்கு ஏற்ற முறையில் விவிலியக் கருத்துக்களை வழங்க வேண்டும்
என இவ்வாரம் புதன்கிழமை கூறினார் . திருநூலினை நன்கு தெரிந்துகொள்ள உலக ஆயர்களின் மாமன்றம்
கருத்தாழம் மிக்க , மரபு திரியாத, புறவாய்மையுடைய சிந்தனைகளை வழங்கியுள்ளது என மேலும்
கூறினார் . விவிலியத்தைப் வெறுமனே வாசிப்பதற்கு மட்டுமல்ல , அங்கு ஆண்டவரைச் சந்தித்து
, வாழ்வின் அழகையும் அர்த்தத்தையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் எனக் கூறினார் . திருச்சபை
வானொலியையும் கணணிகளையும் அதிகம் பயன்படு்த்த வேண்டும் என்றும் கூறினார் . இறைவாக்கை
அன்றாட வாழ்வில் வாழ்ந்தும் , ஆன்மீக வாழ்வை ஆழப்படுத்தியும் இயேசுவை நாம் விவிலியத்தில்
சந்திக்க வேண்டும் எனக் கூறினார் ஆயர் லூயிஸ் டாலே .