2008-10-23 18:15:27

மத்திய மாநிலத்தில் கத்தோலிக்கத் தேவாலயத்தில் தீ . 23 அக்டோபர் .08


சிறுமலர் கத்தோலிக்க தேவாலயம் மத்திய பிரதேசத்தின் திகம்கார் மாவட்டத்தில் உள்ளது . இவ்வாரம் புதன்கிழமை அதிகாலையில் சில தீய சக்திகள் ஆலயத்தினுள் தீ மூட்டியதால் புகை மண்டிக்கொண்டிருந்தது . காலையில் அங்கு வழிபாட்டுக்குச் சென்ற திரு இருதய சபையைச் சேர்ந்த அருள் சகோதரிகள் புகை மண்டிக்கொண்டிருந்த விபரத்தை உதவிப் பங்குத் தந்தை சிசு ஜானுக்குத் தெரிவித்தனர் . தீ அணைக்கப்பட்டது . அங்கு போடப்பட்டிருந்த தரை விரிப்பில் மண்ணெணையை ஊற்றித் தீ வைத்துள்ளனர் . அங்குள்ள கிறிஸ்தவ மகாசங் என்ற அமைப்பு மத்தியப் பிரதேச அரசிடம் பாதுகாப்புக் கோரியுள்ளது. சத்னா மறை மாவட்ட ஆயர் இதுபற்றிக் கூறும்போது அரசு எவ்வித உதவியும் செய்யாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார் . தீமை செய்தோருக்காகச் செபிக்கச் சொல்லியிருக்கிறார் . பின்னர் மாவட்டக் கலெக்டர் திரு. கே.பி. ராய் என்பவரும் , மாவட்டக் காவல்துறை மேலதிகாரி திரு. சிசாந்தி சக்சேனாவும் கோவிலைப் பார்வையிட்டுப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர் . அங்கு நவம்பர் 25 இல் நடக்கவுள்ள மாநிலத் தேர்தலுக்கு இது தீவிர வாதிகளின் தயாரிப்பு எனக் கணிக்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.