அமெரிக்க ஆயர்கள் குழுவின் பிரதிநிதிகளைத் திருத்தந்தை சந்தித்தார். 23அக்டோபர் 08.
திருத்தந்தை ஏறத்தாழ 6 மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார் . அதன்
பிறகு இம்மாதம் 23 இல் அமெரிக்க ஆயர்கள் குழுவின் பிரதிநிதிகளை உரோமையில் சந்தித்தார்
. அமெரிக்க ஆயர்கள் குழுவின் தலைவர் கர்தினால் பிரான்சிஸ் இ. ஜார்ஜ் திருதந்தையோடு தனிப்பட்ட
விதத்தில் பகிர்ந்து கொண்டவைகளை வெளியிட விரும்பவில்லை எனக் கூறினார் . அமெரிக்க ஆயர்குழுவின்
துணைத்தலைவர் ஆயர் ஜெரால்டு கிகானாஸ் , ஆயர்குழவின் பொதுச் செயலர் மேதகு டேவிட் மால்லாய்
ஆகியோரும் உடன் இருந்துள்ளனர் .கர்தினால் ஜார்ஜும் ஆயர் கிகானாசும் அக்டோபர் 5 லிருந்து
26 வரை உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்து கொண்டார்கள் .