இன்றைய புதன் மறைபோதகம் தூய பேதுரு பசிலிக்கா வளாகத்தில் நடந்தது.
வந்தவர்களை
வாஞ்சையோடு வரவேற்றார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்.
கடந்த வாரங்களில் போல இன்றும்
திருத்தந்தை திருத்தூதர் பவுல் அடிகளாரின் இறையியல் சிந்தனைகள் பற்றி மறைபோதகம் செய்தார்
.
தூய பவுல் அடிகளாரின் போதகத்தின் மையப்பொருள் கிறிஸ்துவே என்பது பற்றி
இன்று பார்ப்போம் என்றார் திருத்தந்தை . சிலுவையில் அறையப்பட்ட , உயிர்த்தெழுந்த கிறிஸ்து
திருச்சபைக்குள் உயிரோடு பிரசன்னமாக இருப்பதாகக் கூறுகிறார் தூய பவுல் அடிகளார் . கிறிஸ்து
மனு உரு எடுத்ததையும் , மகிமைப்படுத்தப்பட்டதையும் , அதோடு , உலகம் உருவாவதற்கு முன்னரே
கடவுள் தந்தையோடு இருந்ததாகவும் கூறுகிறார் .ஆதியிலிருந்து கடவுளோடு இருந்தார் என்பது
விவிலியத்தின் பழைய ஏற்பாட்டு நூலில் கடவுளின் ஞானமாக உலகின் தொடக்க காலத்திலிருந்து
இருந்ததாக வரும் பகுதிகள் கிறிஸ்துவைக் குறிப்பதாகவும் , மனிதர்களோடு வந்து தங்குவதாகவும்
தூய பவுல் அடிகளார் உறுதிபடக் கூறுகிறார் . கிறிஸ்துவை இவ்வாறு கடவுளின் ஞானமாகக் கருதும்
தூய பவுல் அடிகளார் , கடவுள் தந்தை ஊழிக்காலம் தொடங்கிக் கொண்டிருந்த மீட்புத் திட்டத்தில்
கிறிஸ்து மையமாகவும் , முடிவான முழுமையாகவும் உள்ளதாகக் கூறுகிறார் . திருத்தூதர் பவுல்
பிலிப்பியருக்கு எழுதிய மடலில் வரும் கிறிஸ்துவைப்பற்றிய கீதத்தில் கிறிஸ்து கடவுள் தன்மையில்
தொடக்க காலம் தொட்டு இருந்ததாகவும் , பின்னர் தம்மையே வெறுமையாக்கி சாவை , அதுவும் சிலுவைச்
சாவையே ஏற்கும் அளவுக்கு தாழ்நிலையை ஏற்றுக்கொண்டார் எனவும் கூறுகிறார் . கடவுளுக்கும்
மனிதருக்குமிடையே இருக்கும் ஒரே நடுவர் கிறிஸ்து எனக் கூறும் தூய பவுல் அடிகளார் , அவர்
ஆதியிலிருந்து இருக்கும் தன்மையையும் , மனித உரு எடுத்ததையும் எடுத்துக் கூறுகிறார் .
கிறிஸ்துவே படைப்புக்களில் எல்லாம் முதன்மையானவர் என்றும் , திருச்சபையின் தலையானவர்
என்றும் தூய பவுல் அடிகளார் கூறுகிறார் . பவுல் அடிகளாரின் ஞானம் நிறைந்த கிறிஸ்துவைப்
பற்றிய இறையியல் நாம் சிலுவையில் அறையுண்ட மற்றும் உயிர்த்தெழுந்த இயேசு , கடவுளின் ஞானமாகவும்
சக்தியாகவும், ஆதி மைந்தராகவும் இருக்கும் இயேசு, அளிக்கும் மீட்பை வரவேற்க நம்மை அழைக்கிறது
என்று மறைபோதகம் வழங்கி , வந்திருந்தோர்க்கும் , அவர்கள் குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியும்
அமைதியும் நிறைந்த அப்போஸ்தலிக்க ஆசியை வழங்கினார் நம் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்
.