இந்தியாவில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கு ஐ.நா. நிறுவனம் உதவுமாறு கேட்டுள்ளது
பாகிஸ்தான் சிறுபான்மையினர் அமைப்பு
அக்.21,2008. மேலும், இந்தியாவில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கு ஐ.நா.
நிறுவனம் உதவுமாறு கேட்டுள்ளது பாகிஸ்தான் சிறுபான்மையினர் அமைப்பு.
இந்தியாவில்
கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறை இடம் பெற்று வருவதை முன்னிட்டு
அறிக்கை வெளியிட்ட பாகிஸ்தான் சிறுபான்மையினர் அமைப்பின் தலைவர் ஷாபாஸ் பாட்டி, சிறுபான்மையினரின்
வாழ்வும் சொத்துக்களும் பாதுகாக்கப்படுவதற்கு சர்வதேச நிறுவனம் தலையிடுமாறு கேட்டுள்ளார்.
இந்தியாவில் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டது குறித்த தனது கவலையையும் அவர் தெரிவித்துள்ளார்