திருப்பலியின் முடிவில் சில மாற்றங்களுக்கு வத்திக்கான் அனுமதி.20அக்.08
திருப்பலியின் முடிவின்போது வழக்கமாக , சென்று வாருங்கள். திருப்பலி முடிந்தது , எனத்
திருப்பலி நிறைவேற்றும் குருவானவர் வாழ்த்துக் கூறி அனுப்புவது வழக்கம். அதற்கு வேறு
சில பாடங்களும், மாற்று உரைகளும் பயன்படுத்தப்படலாம் எனத் தரப்பட்டுள்ளன . இதுபற்றி வத்திக்கான்
திருப்பீட வழிபாடு மற்றும் அருட்சாதனங்கள் ஆணையகத்தின் தலைவர் கர்தினால் பிரான்சிஸ் அரின்ஸ்
சனிக்கிழமை செய்தி வழங்கினார் . 2005 ஆம் ஆண்டு சில மாற்றங்கள் நல்லதெனத் தேவ நற்கருணை
பற்றி நடந்த ஆயர்கள் மாமன்ற மாநாடு திருத்தந்தைக்குப் பரிந்துரைத்தது. நற்செய்தி அறிவிப்புப்
பற்றித் திருப்பலி முடிவில் மறைபரப்புச் செய்தி வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டது
. அப்படி வந்த மாற்றுப் பாடங்களுக்குத் திருத்தந்தை ஒப்புதல் வழங்கியுள்ளார் . திருத்தந்தை
மாற்றுப் பாடங்களைக் கேட்டிருந்தார் . 72 மாற்றுப்பாடங்கள் பரிந்துரைக்கப்பட்டன. திருத்தந்தை
மூன்று பாடங்களைத் தெரிவு செய்துள்ளார் . மாற்றுப் பாடங்களாவன
1- நற்செய்தியை
அறிவிக்கச் சென்று வாருங்கள் .
2- உங்கள் வாழ்வால் ஆண்டவரை மகிமைப்படுத்தி
அமைதியில் சென்று வாருங்கள் .
3- அமைதியில் சென்று வாருங்கள் .----- பாஸ்காக்
காலத்தில், அல்லேலூயா, அல்லேலூயா--- என்ற பகுதி சேர்த்துக் கொள்ளப்படும் .
2005
ஆம் ஆண்டு நடந்த ஆயர்கள் மாமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்ட தேவ நற்கருணை பற்றிய தொகுப்பு
ஒன்று முடியும் தருவாயில் இருப்பதாகக் கர்தினால் அரின்ஸ் தெரிவித்துள்ளார் .