சமயங்கள் அமைதிக்கு வழிவகுப்பதில் முக்கியப் பங்கு .20அக்டோபர்.08 .
சர்வ தேச அமைதியைக்கட்டி எழுப்புவதில் உலகின் அனைத்து முக்கியச் சமயங்களுக்கும் முக்கியப்
பங்கு உள்ளது என ஆசிய மதப் பிரதிநிதிகளுக்கான உரையில் அழைப்பு விடுத்தார் ஐ.நா சபையின்
பொதுச் செயலர் பாங்கி மூன் . பிலிப்பைன்ஸின் மணிலாவில் இடம் பெறும் அமைதிக்கு வழி வகுக்க
, நடக்கும் சமயங்களின் ஆசியக் கருத்தரங்குக்கு செய்தி அனுப்பியுள்ளார் பாங்கி மூன் .
உலகில் அமைதியை உருவாக்கி கட்டிக்காக்க ஐ. நாவுடன் இணைந்து உழைக்குமாறு மதங்களுக்கு அவர்
அழைப்பு விடுத்துள்ளார் . மதங்களின் பிறப்பிடமாகிய ஆசியாவில் மதங்களின் பெயரால் பிரிவினைப்போக்குகள்
இடம்பெறுவது குறித்து கவலையைத் தெரிவித்தார் அவர் . மதத்தலைவர்கள் , அரசுக்கள் , அமைதிக்காக
உழைக்கும் அனைத்து அமைப்புக்கள் , சமூகத் தொடர்புத்துறை என அனைவரையும் ஒன்றிணைக்கும்
கலாச்சாரக் கூட்டமைப்பு ஒன்றை ஐ.நா அமைப்பு உருவாக்கியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்
ஐ.நாவின் பொதுச் செயலர் பாங்கி மூன் .