வத்திக்கான் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் 12 ஆம் பத்தினார் பற்றி அறிக்கை.
18
அக். 08 .
திருத்தந்தை 12 ஆம் பத்தினாதருக்கு முத்திப்பேறு பட்டம் வழங்கக்கூடாது என இஸ்ராயேலின்
யாத் வாசெம் பொருட்காட்சி நிறுவனத்தினர் கூறியிருப்பது பற்றித் தெளிவுபடுத்தினார் வத்திக்கான்
திருப்பீடத்தின் செய்தித் தொடர்பாளர் அருள் தந்தை பெடரிக்கோ லொம்பார்டி . இஸ்ராயேல் நிறுவனத்தவர்
கூறியுள்ளது சரியாகப் பரிசீலிக்கப்படும். இந்தப் பிரச்சனையோடு திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்
புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொள்வதை இணைக்கத் தேவையில்லை . ஆனால் திருத்தந்தை இஸ்ராயேலுக்குச்
செல்வது இன்னும் சரியாகத் திட்டமிடப்படவில்லை . முத்திப்பேறு பட்டம் வழங்குவது பற்றி
முன்னர் தந்தை லொம்பார்டி முன்பு கூறியதையே திரும்பக் கூற விரும்பினார் . திருத்தந்தை
12 ஆம் பத்தினாதருக்கு முத்திப் பேறு பட்டம் வழங்குவதற்கு வேண்டிய தயாரிப்பைத் தொடங்குவதற்குத்
திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் இன்னும் உரிய ஆவணத்தில் கையொப்பம் இடவில்லை . இது ஆழமாகச்
சிந்திக்கப்படவேண்டிய ஒன்று . இப்பொழுது உள்ள சூழ்நிலையில் திருத்தந்தை இது பற்றி முடிவெடுக்கக்
காலதாமதமாகும் .