சனிக்கிழமை மாலை வழிபாட்டுக்குப் பிறகு திருத்தந்தையின் உரை .18 அக்.-08.
இவ்வாரம் சனிக்கிழமை உலக மாமன்ற ஆயர்களோடு வத்திக்கானின் புகழ் மிக்க சிஸ்டைன் தேவாலயத்தில்
நாளைய ஞாயிறு வழிபாட்டை ஒட்டி மாலை வழிபாடு நடந்தது . அதுபோது கிறிஸ்தவ ஒன்றிப்புப் பிதாப்பிதா
முதலாவது பர்த்தலோமேயு மறையுரை வழங்கினார் . அதற்கு வழிபாட்டின் முடிவில் நன்றிகூறிய
திருத்தந்தை அவருடைய மறையுரைக்குக் கிடைத்த கை தட்டல் மிக்க மகிழ்ச்சியையும் , ஆன்மீக
உணர்வுகளையும் வெளிப்படுத்தியதாகக் கூறினார் . ஆயர்கள் மாமன்றத்தை நாம் மெய்யாகவே அனுபவித்தோம்
என்றார் திருத்தந்தை . ஆண்டவர் இயேசு பிறந்த புண்ணிய பூமிக்கு பிதாப்பிதாவின் வழிகாட்டுதலோடு
பயணம் ஒன்றாகச் சென்றதாகக் கூறினார் . இறைவாக்கை மிக்க அழகோடு இரசித்தோம் என்றார் திருத்தந்தை
16 ஆம் பெனடிக்ட் . இறைவார்த்தையை அர்த்தமுள்ள முறையில் விளக்கியபோது அதன் ஒளியில் இன்றைய
உலககையும் இன்றைய எதார்த்ததங்களையும் உணரமுடிந்தது என மேலும் திருத்தந்தை கூறினார் .