இந்தியா– பேராயர் இரபேல் சீனத் உயர் நீதி மன்றத்தில் வழக்கு. 18 அக்.08 .
பேராயர் இரபேல் சீனத் ஒரிசாவின் கிறிஸ்தவர்களுக்கு எதிராக தீவிரவாதிகள் நடத்தும் வன்முறைகளை
மாநில அரசும் உள்ளூர் காவலர்களும் தடுக்கத் தவறிவிட்டதாக உயர் நீதி மன்றத்தில் தொடுத்த
வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது. அதே போல பங்களுரில் கிறிஸ்தவத் தேவாலயத்தில்
தீ பரவியது சாதாரண விபத்து என்று காவலர்கள் கூறியுள்ளதற்கு மறுப்புத் தெரிவித்து , அங்கு
தீ வேண்டுமென்றே தீய சக்திகளால் வைக்கப்பட்டது என பங்களூர்ப் பேராயர் பெர்நார்து மோராஸ்
தெரிவித்துள்ளார் .