முந்நாள் திருத்தந்தை விரைவில் புனிதர் பட்டம் பெற அவரது செயலர் செபம் .
16 அக்.
08 .
முந்நாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டதன் 30
ஆண்டு மகிழ்ச்சி விழா அக்டோபர் 16 இல் கொண்டாடப்படுகிறது . அதை ஒட்டிக் கருத்துத் தெரிவித்த
போலந்து நாட்டின் கிராக்கோ மாநகரக் கர்தினால் ஸ்தனிஸ்லாஸ் ஷீவிஷ் செய்தியாளர்களிடம் பேசியபோது
அவரும் அவரது மாநகர இறைமக்களும் முந்நாள் திருத்தந்தை விரைவாகக் புனிதர்பட்ட பெறச் செபிப்பதாகக்
கூறினார் . 69 வயதுடைய கர்தினால் முந்நாள் திருத்தந்தையின் தனிச் சிறப்புச் செயலராக 39
ஆண்டுகள் இருந்திருக்கிறார் . 69 வயதாகும் கர்தினால் ஸ்தனிஸ்லாஸ் ஷீவிஷ் அவருடைய வாழ்நாட்களிலேயே
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் புனிதராக ஆலயப்பீடங்களில் போற்றப்பட வேண்டும் என ஆவலோடு
இருப்பதாகத் தெரிவித்துள்ளார் . அக்டோபர் 16 இல் முந்நாள் திருத்தந்தையைப் பற்றிய திரைப்படம்
வத்திக்கானில் வெளியிடப்பட்டது . அதை கர்தினால் அவர் எழுதிய கரோலுடன் ஒரு வாழ்வு என்ற
நூலின் அடிப்படையில் தயாரித்திருந்தார் . திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் புனிதர் பட்டம்
பற்றி மேலும் கூறிய அவர் புனிதர் பட்டம் ஒருவரைப் புனிதராக்குவதில்லை . அது புனிதத் தன்மையை
அங்கீகரிப்பதாகும் என்றார் .