திருத்தந்தையை ஈக்வடோர் ஆயர்கள் சந்தித்தனர் .16 அக்டோபர் 08.
ஈக்வடோர் நாட்டின் ஆயர்குழு வழக்கமான அத்லீமினாவுக்காக திருத்தந்தை 16 ஆம் பெனடிக்டை
அவரது வத்திக்கான் திருப்பீட இல்லத்தில் சந்தித்தனர் . திருத்தந்தை அவர்களை வாழ்த்தி
வரவேற்றார் . அதுபோது திருத்தூதர் பேதுரு கொடுத்துள்ள கட்டளை யாதெனின் உம் சகோதரர்களை
விசுவாசத்தில் உறுதிப்படுத்துக என்பதாகும் . அக்கட்டளையை நான் உங்களைச் சந்திப்பதில்
நிறைவேற்றுகிறேன் எனக்கூறினார் திருத்தந்தை . ஈக்வடோர் நாட்டின் ஓய்வு பெற்ற கர்தினால்
அந்தோனியோ ஜோஸ் கொண்சாலஸ் மறைவுக்கு வருத்தமும் அனுதாபமும் தெரிவித்தார் திருத்தந்தை
. ஈக்வடோர் நாட்டு ஆயர்கள் குழுவின் தலைவர் அரெகுயி யார்ஷா தொடக்கத்தில் வழங்கிய வாழ்த்துரைக்கு
நன்றி கூறினார் திருத்தந்தை . உங்களுடைய தேவைகளை மனதில் கொண்டுள்ளேன். தாராள மனத்தோடு
உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இறைமக்களுக்கு இறைப்பணி செய்கவென்று வேண்டுகோள் வைத்தார்
திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .