ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு அமர்வில் செலஸ்டீனோ மிலியோரே.
16 அக். 08
உலகெங்கும் மலேரியாவை ஒழித்திடுவது பற்றி ஐக்கிய நாடுகள் சபைத் தலைவர் கருத்தாய்வுத்
திட்டத்தை முன் வைத்தார் . 2001 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டுக்குள் முக்கியமாக ஆப்பிரிக்காவில்
மலேரியா ஒழிக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது . விழிப்புணர்வாலும், இது பற்றிய கல்வியைப்
புகட்டுவதாலும் , இதை ஒழிக்க ஆவன செய்வதாலும் இந்நோயை முறியடிக்க முடியும் என எடுத்துரைத்தார்
ஐ.நாவின் வத்திக்கானுக்கான நிரந்தர உறுப்பினர் பேராயர் செலஸ்டீனோ மிலியோரே . கடந்த 15
ஆண்டுகளில் இந்நோய் அதிகரித்துள்ளது . அதனால் சாவும் அதிகரித்துள்ளது . அகில உலகமும்
இதை ஒழிக்க முனைப்போடு செயல்பட வேண்டும் எனப் பேராயர் மிலியோரே எடுத்துரைத்தார் . எச்.
ஐ .வி , எய்ட்ஸ் , எலும்புருக்கி நோயான டி. பி. போன்றவைகளை தீவிரமாக ஒழிக்க முயலும் தற்பொழுது
அதன் காரணமாக மலேரியாவை ஒழிப்பதை ஓரம் கட்டக்கூடாது என்று கூறிய பேராயர் மிலியோரே , மனித
உயிருக்கு ஊறு விளைவிக்கும் எல்லா நோய்களையும் கட்டுப்படுத்த உலகம் எனும் குடும்பம் முயல
வேண்டும் என வேண்டுகோள் வைத்தார் .