அக்.14,2008. ஈக்குவதோர் நாட்டு கர்தினால் அந்தோணியோ ஹோசே கொன்சாலெஸ் சுமராஹா இறைபதம்
அடைந்ததையொட்டி தமது இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஈக்குவதோர்
நாட்டு திருப்பீடத் தூதுவருக்குத் திருத்தந்தை அனுப்பிய செய்தியில், கர்தினாலின் பல்வேறு
பணிகளைப் பாராட்டியுள்ளதோடு அவரின் ஆன்மா நிறைசாந்தி அடைய செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
83
வயதாகும் கர்தினால் கொன்சாலெஸ் சுமராஹா, திருச்சபை சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
2001 இல் திருத்தந்தை 2ம் ஜான்பவுல் இவரைக் கர்தினாலாக உயர்த்தினார்.
கர்தினால்
கொன்சாலெஸ் சுமராஹாவின் இறப்புடன் திருச்சபையில் கர்தினால்களின் எண்ணிக்கை 192 ஆகக் குறைந்தது.
திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கத் தகுதிபெற்ற 80 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 116
ஆகவுள்ளது