புனித அல்போன்சா இம்மாகுலேட்டின் புனிதை பட்ட விழா- மறையுரை.1210.
என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார் , என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும்
கண்ணீரைத் துடைத்துவிடுவார் , இசையாஸ்,25.8 .
அல்போன்சாவின் வாழ்வில்
அவள்பட்ட அளப்பரிய உடல் வாதைகள் , மற்றும் மனத்துயரங்களைத் தாங்கிக் கொள்ள இறைவாக்கினர்
எசாயாவின் இறை வார்த்தைகள் துணையாக இருந்தன எனக்கூறினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்
. இவர் வித்தியாசமான பெண்மணி – முதல் பெண் புனிதையாக இவர் இந்தியாவுக்குக் காணிக்கையாக்கப்படுகிறார்
. வானகத்தில் இறைத்தந்தை தயார் செய்துள்ள விருந்துக்குக் கூட்டிச்செல்லும் வழி சிலுவைப்பாதை
என்பதை உணர்ந்திருந்தார் அல்போன்சாள் . திருமண விருந்துக்கு வந்த அழைப்பை ஏற்று அதற்குத்
தகுதியுள்ள முறையில் செபத்தின் வழியாகவும் , தவத்தின் வழியாகவும் அருளை ஆடையாக அணிந்துகொண்டும்
அவர் கிறிஸ்துவுக்கு ஏற்புடையவரானார். துன்புறாத நாட்களையெல்லாம் நான் வாழ்நாளில் இழப்பாகக்
கருதுகிறேன் என அவர் மடலில் எழுதியிருந்தார் . நமக்கு வரும் சிலுவைகளை அவரைப்போன்று நாமும்
தாங்கிக்கொண்டு அவரோடு ஒரு நாள் வான்வீட்டில் மகிழ்ந்திருக்கும் பேறு பெறுவோமாக என்று
மறையுரை வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்.