உரோமையிலுள்ள இந்தியக் கிறிஸ்தவர்கள் கூட்டம் . 101008.
உரோமையிலுள்ள இந்தியக்கிறிஸ்தவர்கள் முத்தி பெற்ற அல்போன்சாவின் புனிதைப் பட்டமளிப்பு
விழாவை முன்னிட்டு இவ்வாரம் சனிக்கிழமை மாலை இங்குள்ள புனித பியாஜோ, புனித கார்லோ ஆலயத்தில்
ஒன்று கூடி செபிக்க உள்ளார்கள் . முத்திபெற்ற அல்போன்சாவைப் பற்றி விளக்கிக் கூறும் திரைப்படம்
காட்டப்பட உள்ளது . இயேசுசபைக்குரு தந்தை ஜேக்கப் செராம்பிக்கல் அல்போன்சாவைப்பற்றிய
சிந்தனைகளை வழங்குவார் . இந்தியாவைச் சேர்ந்த கர்தினால் இவான் டயஸ் , கர்தினால் வர்க்கி
வித்யாத்தில் , பேராயர் மோரான் மார் பசிலேயோஸ் , ஆயர்கள் , குருக்கள் , அருள்சகோதரிகள்
, முத்தி பெற்ற அல்போன்சாவின் துறவறச்சபையின் இப்போதைய தலைவி , மற்றும் திருப்பயணிகள்
இங்கு ஒன்றுகூடிச் செபிக்க உள்ளார்கள் .அல்போன்சா இந்தியாவின் முதல் மகளிர் புனிதை என்பதற்காக
இறைவனுக்கு நன்றி கூறுவதோடு துன்புறும் ஒரிசாக் கிறிஸ்தவர்களுக்காக மன்றாடவும் உள்ளனர்
.