2008-10-10 20:33:10

உரோமையிலுள்ள இந்தியக் கிறிஸ்தவர்கள் கூட்டம் . 101008.


உரோமையிலுள்ள இந்தியக்கிறிஸ்தவர்கள் முத்தி பெற்ற அல்போன்சாவின் புனிதைப் பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு இவ்வாரம் சனிக்கிழமை மாலை இங்குள்ள புனித பியாஜோ, புனித கார்லோ ஆலயத்தில் ஒன்று கூடி செபிக்க உள்ளார்கள் . முத்திபெற்ற அல்போன்சாவைப் பற்றி விளக்கிக் கூறும் திரைப்படம் காட்டப்பட உள்ளது . இயேசுசபைக்குரு தந்தை ஜேக்கப் செராம்பிக்கல் அல்போன்சாவைப்பற்றிய சிந்தனைகளை வழங்குவார் . இந்தியாவைச் சேர்ந்த கர்தினால் இவான் டயஸ் , கர்தினால் வர்க்கி வித்யாத்தில் , பேராயர் மோரான் மார் பசிலேயோஸ் , ஆயர்கள் , குருக்கள் , அருள்சகோதரிகள் , முத்தி பெற்ற அல்போன்சாவின் துறவறச்சபையின் இப்போதைய தலைவி , மற்றும் திருப்பயணிகள் இங்கு ஒன்றுகூடிச் செபிக்க உள்ளார்கள் .அல்போன்சா இந்தியாவின் முதல் மகளிர் புனிதை என்பதற்காக இறைவனுக்கு நன்றி கூறுவதோடு துன்புறும் ஒரிசாக் கிறிஸ்தவர்களுக்காக மன்றாடவும் உள்ளனர் .








All the contents on this site are copyrighted ©.