புனித டென்னிஸ் மற்றும் தோழர்கள் , மறைசாட்சியர் – கி.பி.258 .08008 .
அக்டோபர் மாதம் 09 ஆம் தேதி நாம் புனித டென்னிஸுடைய விழாவைக் கொண்டாடுகிறோம் . இவர் பிரான்ஸ்
நாட்டின் பாதுகாவலர் . பிரான்சின் புகழ் வாய்ந்தவரும் , மக்களுக்குப் பிடித்தமானவருமாவார்
. இவர் உரோமையிலிருந்து மறைபரப்புப் பணிக்காக பிரான்சுக்குச் சென்றிருக்கிறார் . கி.
பி . 258 ல் வலேரியன் நடத்திய கொலைபாதகச் செயல்களுக்குப் பலியானவர் . இவரது கல்லறை மேல்
கி .பி .7 ஆம் நூற்றாண்டில் டாகோபெர்ட் அரசனால் ஒரு துறவற மடம் எழுப்பப்பட்டிருக்கிறது
. அவர் காலத்தில் வாழ்ந்த மக்கள் அவரது புனிதத்துவத்தை நன்கு உணர்ந்திருந்திருந்ததால்
அவருடைய பக்தி வளர்ந்தது. கடவுள் மனிதராகிய டென்னிஸை அந்நாள் முதல் இந்நாள்வரை இறைமக்கள்
மறக்கவில்லை .