2008-10-08 15:38:54

அக்டோபர் மாதத்தில் கத்தோலிக்கர் செபமாலை செபிக்க திருத்தந்தை அழைப்பு


செப்.08,2008 செபமாலை அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள அக்டோபர் மாதத்தில் கத்தோலிக்கர்கள் தினமும் செபமாலை செபிக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அழைப்பு விடுத்தார்.

வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் இன்று திருத்தந்தையின் பொது மறை போதகத்தைக் கேட்பதற்காகக் கூடியிருந்த ஏறத்தாழ நாற்பதாயிரம் பயணிகளிடம், பாரம்பரியமாகச் சொல்லப்படும் இம்மாதா செபத்தின் மதிப்பை உணருவதற்கு இம்மாதம் விலைமதிப்பற்ற தருணமாக இருக்கின்றது என்றார்.

இத்தாலியின் பொம்பை நகரில் செபமாலை அன்னை திருத்தலம் அமைந்துள்ளது. அத்திருத்தலத்திற்கு இம்மாதம் 19ம் தேதி செல்கிறார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.