அக்.06,2008. இளந்தொழிலாளர்களுக்கான, ஏற்பு நிலைகளுடன் கூடிய நிரந்தரப் பணிக்கான உரிமை
மற்றும் சமூகபாதுகாப்புக்கான விண்ணப்பத்துடன் IYCW அமைப்பு தமிழகத்தின் தஞ்சாவூரில் சர்வதேசக்
கூட்டம் ஒன்றை நடத்தி வருகிறது.
உலகின் பல பாகங்களிலிருந்து 60 பிரதிநிதிகள் கலந்துகொள்ளும்
இக்கூட்டம், இளங்கிறித்தவத் தொழிலாளர்கள் தங்கள் நிலை குறித்து உணர்ந்து கொள்ளவும், அவர்களின்
உண்மை நிலைகள் குறித்து சமூகம் அறிந்து கொள்ளவும் உதவுவதாக இருக்கும் என்றார் இவ்வமைப்பின்
தலைவர் திருவள்ளுவர் யோவெல்.
இக்கூட்டம் இம்மாதம் 15 ந்தேதி நிறைவு பெறும்.
1965ம்
ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்ட பெல்ஜியம் குரு. Joseph Cardijn ஆல் 1919ல் உருவாக்கப்பட்ட
இவ்வமைப்பு, உலகம் முழுவதும் இளந்தொழிலாளர்களின் நலனுக்காக உழைத்து வருகின்றது.