2008-10-04 12:28:23

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவ அயர்லாந்து ஆயர்கள் அழைப்பு


அக்.04,2008. அயர்லாந்து திருச்ச்பை வாழ்வு தினத்தை இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கும் வேளை, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவ அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இத்தினத்தை முன்னிட்டு அயர்லாந்து ஸ்காட்லாண்ட், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் இணைந்து வெளியிட்டுள்ள மேய்ப்புப்பணி அறிக்கை, பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் பதட்டம் இன்னும் பிற மன நோய்களால் துன்புறுவோருக்கு உதவுமாறு கேட்டுள்ளது.

ஒவ்வொரு குடிமகனும் மனநலத்துடன் வாழ்வதற்கு உரிமை கொண்டுள்ளான் என்றுரைக்கும் ஆயர்களின் அறிக்கை, இவ்வாறு வாழ்வதற்கு ஒருவர் மற்றவருக்கு உதவ வேண்டும் என்றும் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.