2008-10-04 12:26:25

இயற்கை கருவுறுதலின் அழகை இரசிப்பதற்குத் தம்பதியருக்குத் திருச்ச்பை உதவ வேண்டும் – திருத்தந்தை


அக்.04,2008. கத்தோலிக்கத் தம்பதியர், இயற்கையாக கருவுறுதலை மதிப்பதன் அழகை இரசிப்பதற்கும் அதேசமயம் செயற்கையாகக் கருவுறுதலையும் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவதையும் விலக்கி நடப்பதற்குமான வழிகளைக் காண்பதற்குத் திருச்ச்பை உதவ வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வலியுறுத்தினார்.

மனித வாழ்வும் குடும்பக் கட்டுப்பாடும் பற்றிய திருத்தந்தை ஆறாம் பவுலின் அப்போஸ்தலிக்கச் சுற்றுமடல் வெளிவந்து நாற்பது ஆண்டுகள் ஆகியும் உலகும் அநேக

கத்தோலிக்கரும் இவை பற்றிய திருச்ச்பையின் போதனைகளைப் புரிந்து கொள்வதற்கு இன்னும் கஷ்டப்படுவது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் அவர்.

ஹியுமானே வீத்தே - மனித வாழ்வு என்ற சுற்றுமடல் வெளியிடப்பட்டதன் 40 ஆம் ஆண்டையொட்டி நடைபெற்ற இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை, இச் சுற்றுமடல், திருமண அன்பு பற்றிய கடவுளின் திட்டத்தை மதிக்கும் அதேவேளை, அதன் அழகை விளக்கி பாதுகாக்கின்றது என்றார்.








All the contents on this site are copyrighted ©.