2008-10-01 15:19:07

சாமுண்டா தேவி கோயிலில் நெரிசலில் இடம் பெற்ற உயிரிழப்புகள் குறித்து இந்திய ஆயர்கள் ஆழ்ந்த அனுதாபம்


அக்.01,2008. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மலைப்பகுதியில் உள்ள சாமுண்டா தேவி கோவில் ஜன நெரிசலில் இடம் பெற்ற உயிரிழப்புகள் குறித்த ஆழ்ந்த அனுதாப அறிக்கை ஒன்றை இந்திய கத்தோலிக்க ஆயர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே இத்தகைய அசம்பாவிதங்கள் அண்மை காலங்களில் இடம் பெற்றுள்ள போதிலும் திருவிழாக் காலங்களுக்கென போதிய முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படாதது கவலை தருவதாக உள்ளது எனவும் ஆயர்களின் அறிக்கை

மேலும் கூறுகிறது.

உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தங்கள் அனுதாபங்களை வெளியிடு்ம் அதேவேளை இத்தகைய துன்பநிகழ்வுகள் மீண்டும் இடம் பெறாவண்ணம் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசு அதிகாரிகளை விண்ணப்பிப்பதாகவும் இந்திய ஆயர்கள் தங்களின் அறிக்கையில் கூறியுள்ளனர்.

நேற்று ராஜஸ்தானின் ஜோத்பூருக்கு அருகேயுள்ள சாமுண்டா தேவி கோவிலில் இடம் பெற்ற கூட்ட நெரிசலில் 150க்கும் மேற்பட்டோர் இடம் பெற்ற உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.