செப்.30,2008. முதியோரை மதித்து அவர்களைக் கவுரவித்து அவர்கள் மீது கரிசனை செலுத்தப்பட
வேண்டும் என்பதை வலியுறுத்தி 1990ம் ஆண்டு ஐ.நா. பொது அவை அக்டோபர் 1ம் தேதி உலக முதியோர்
தினம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அறிவித்தது.
ஐ.நா.வின் கணிப்புப்படி தற்சமயம்
உலகில் ஒவ்வொரு பத்துப் பேருக்கு ஒருவர் வீதம் அறுபதும் அதற்கு மேற்பட்ட வயதை உடையவர்கள்.
இது 2050இல் 5க்கு ஒருவர் வீதமும் 2150 இல் 3க்கு ஒருவர் வீதமும் இருக்கும்.