கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் ஓர் அவமானம் . கர்தினால் கிராசியாஸ் . 26
செப்.-08.
கிறிஸ்தவர்களுக்கு எதிராக இந்தியாவில் நிகழும் வன்முறைகள் அவர்களைக் குறிவைத்துத் தாக்குவதாக
உள்ளது .இது புரியமுடியாதது , அவமானத்துக்குரியது , பைத்தியக்காரத்தனமானது என மும்பைப்
பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் கூறினார் . உரோமையின் வத்திக்கான் திருப்பீட
நாளிதழ் லொஸ்ஸர்வாத்தோரே ரோமானோவுக்குப் பேட்டி அளித்தபோது அவர் இவ்வாறு கூறினார் . இந்தியாவில்
உள்ள நல்ல மனம் கொண்ட இந்துக்கள் , இஸ்லாமியர் மற்றும் பிற மதத்தினர் தீவிரவாதிகளின்
அராஜகப் போக்கைக் கண்டு அதிர்ந்துபோயுள்ளனர் என்று கர்தினால் மேலும் கூறினார் . செயல்
இழந்து இருப்பதையும் பழிவாங்கும் எண்ணத்தையும் விடுத்து, தீவிரவாதம் ஒரு நாளும் வென்றதில்லை
என்பதை மனதில் கொண்டு செபத்தால் வெல்வோம் என மும்பைப் பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ்
கூறியுள்ளார்.