கத்தோலிக்க உயர் கல்வி கருத்தரங்கின் பிரதிநிதிகளை வரவேற்றுப் பேசினார் திருத்தந்தை 16
ஆம் பெனடிக்ட் . 25செப்.-08.
25 செப். 08 இந்த வியாழன் இத்தாலிய ஆயர் குழு கூட்டியுள்ள கத்தோலிக்க உயர்கல்வி கருத்தரங்கு
உரோமையில் நடந்தது . வத்திக்கான் திருப்பீடத்தின் கததோலிக்கக் கல்விக்கான வாரியத்தலைவர்
கர்தினால் ஷெனான் குரோச்சோலெவிஸ்கியும் அவ்வாரியத்தின் செயலர் மேதகு ஷான் லூயி புரூகுவஸ்
என்பாரும் உதவிச் செயலர் மேதகு ஆஞ்சலோ ஜானி என்பாரும் மற்றும் கருத்தரங்கில் பங்கேற்போரும்
திருத்தந்தையை அவருடைய காஸ்டல் கண்டால்போ மாளிகையில் சந்தித்தனர் . அவர்களைத் திருத்தந்தை
16 ஆம் பெனடிக்ட் வாழ்த்தி வரவேற்றார் . கத்தோலிக்க ஆயர் குழு அமைத்துள்ள கத்தோலிக்க
உயர் கல்வி செயலகத்தின் 10 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்துக்கு வாழ்த்துக்கூறிய திருத்தந்தை
பொது வாழ்விலும் திருச்சபை வாழ்விலும் இச்சங்கம் ஆற்றும் அரும் பணிகளைப் பாராட்டினார்
. பொது மக்களை நல்ல குடி மக்களாக வளர்ப்பதற்கு உதவிடுமாறு திருத்தந்தை அவர்களைக் கேட்டுக்
கொண்டார் . கிறிஸ்தவ விசுவாசத்தை அறிக்கையிடுவதோடு மனித வாழ்வை மலரச் செய்யுமாறும் திருத்தந்தை
அவர்களைக் கேட்டுக்கொண்டார் .