2008-09-24 13:49:59

இலங்கையில் புலம் பெயர்ந்த மக்களுக்கான உதவிகளுக்கு ஆயர்கள் அழைப்பு


செப்.24,2008. இலங்கையின் உள்நாட்டுப் போரால் ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக போதிய உணவின்றி குடிபெயர்ந்து வருவது குறித்து அந்நாட்டு ஆயர் பேரவை ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இடம் பெறும் போர்களால் குடிபெயர்ந்துள்ள மக்களுக்குப் போதிய உணவு, மருந்து மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் சென்றடைவதில் காணப்படும் சிரமங்களைக் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், அப்பாவி பொது மக்கள் வான்தாக்குதல்களில் பலியாகி வருவதையும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதையும் குறித்து கவலையை தெரிவித்துள்ளனர்.

போரிடும் இருதரப்பினரும் பொது மக்களின் பாதுகாப்பிற்கு உறுதி செய்யும் சர்வதேச மனித உரிமை சடடங்களை மதித்துச் செயல்பட வேண்டும் எனவும் இலங்கை ஆயர்கள் தங்கள் அறிக்கையில் விண்ணப்பித்துள்ளனர்







All the contents on this site are copyrighted ©.