அக்.5 , 12வது உலக ஆயர் பேரவை ஆரம்பம்- புனித பவுல் பசிலிக்காவில் திருத்தந்தை திருப்பலி
செப்.23,2008. வருகிற அக்டோபர் ஐந்தாம் தேதி, 12வது உலக ஆயர் பேரவை, உரோம் புனித பவுல்
பசிலிக்காவில் உரோம் நேரம் காலை ஒன்பது மணி முப்பது நிமிடங்களுக்குத் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட் நிகழ்த்தும் திருப்பலியுடன் தொடங்குகிறது.
திருச்சபையின் வாழ்விலும்
பணியிலும் இறைவார்த்தை என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இந்த 12வது உலக ஆயர் பேரவை, அக்டோபர்
26ம் தேதி நிறைவு பெறும்.
இன்னும், வருகிற அக்டோபர் நான்காம் தேதி இத்தாலிய அரசுத்
தலைவர் ஜார்ஜோ நாப்போலித்தானோவை, உரோமையிலுள்ள அரசுத் தலைவர் அலுவலகத்தில் சந்திப்பார்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அரசுத் தலைவர் நாப்போலித்தானோ 2006 ம் ஆண்டு முதல்
பதவியில் இருக்கிறார். இத்தாலிய அரசுத் தலைவரின் பதவிக் காலம் ஏழு ஆண்டுகள்.