2008-09-22 20:53:37

அடைக்கல அன்னையின் பிரான்சிஸ்கு சபைச் சகோகரிகள் துறவறச் சபையின் 150 ஆவது ஆண்டு விழா . 220908 .


இம்மாதம் 16 ஆம் தேதி அடைக்கல அன்னை துறவறச்சபையின் 150 ஆவது ஆண்டுக்கொண்டாட்டத்தின் நினைவாக பாளையங்கோட்டையில் தீரா நோயுற்றோர் மையத்துக்கு தமிழக முதல்வர் திரு. மு. கருணாநிதியின் மகளும் இராஜ்ய சபை உறுப்பினருமான கனிமொழி அடிக்கல் நாட்டினார் . சமுதாயத்தில் பின் தங்கியோருக்கு தரமான மருத்துவ உதவிகளை வழங்கியும் , நல்ல கல்விச் சேவை புரிந்தும் அடைக்கல அன்னை சகோதரிகள் ஆற்றிவரும் பணியைப் பாராட்டினார் . தொண்டு நிறுவனங்கள் அரசு செய்து வரும் சேவையோடு இணைந்து கான்சர் மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பற்றி கிராம மக்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களுக்கு உதவிடுமாறு கேட்டுக்கொண்டார் கனிமொழி . இச்சபை அன்னை லூர்து மேரி என்பவரால் 1858 ல் தொடங்கப்பட்டது .








All the contents on this site are copyrighted ©.