2008-09-20 15:52:03

ஒலிம்பிக் விளையாட்டின் இறுதி நாளில் கைது செய்யப்பட்ட சீன ஆயர் விடுதலை


செப்.20, 2008. சீனாவில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நிறைவு பெறுவதற்கு ஒருசில மணி நேரங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட ஆயர் ஜூலியஸ் ஜியா ஜிகு, அந்நாட்டில் ஊனமுற்றோர்க்கென நடை பெற்ற சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முடிந்தவுடன் காவல்துறை பாதுகாப்போடு அவரது இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

73 வயதாகும் ஆயர் ஜூலியஸ் தனது ஜெங்டிங் மறைமாவட்டத்தில் ஏறத்தாழ 100 ஊனமுற்ற சிறார்க்கென இல்லம் நடத்தி வருகிறார்.

இவர் ஏற்கனவே 1963 முதல் 1978 வரை 15 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். எனினும் 1989ம் ஆண்டு முதல் காவல்துறை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்







All the contents on this site are copyrighted ©.