2008-09-19 19:36:19

பசியின் கொடுமை பொல்லாதது என்கின்றார் வத்திக்கான் திருப்பீட அதிகாரி . 19செப்.-08.


நடந்துவரும் ஐக்கிய நாடுகளின் சபைக் கருத்தரங்கில் விவசாயம் மற்றும் உணவு பற்றி விவாதிக்கப்பட்டது .

உணவுப்பொருள் விலை ஏற்றம் காரணமாக உலகளவில் பசித்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐ.நா. சபை கூறியுள்ளது . வத்திக்கான் வானொலிக்கு இம்மாதம் 17 அன்று செய்தி வழங்கிய வத்திக்கான் திருப்பீட அதிகாரி மேதகு ஆல்டோ ஜியார்டானோ,- உலகில் சத்துக்குறைவான உணவை உட்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகின்றது . இந்த நிலைமையை ஐரோப்பிய நாடுகள் கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கூறினார் . பசியின் கொடுமையால் துயருறும் மக்களின் நிலைமை தெரிந்தும் அது பற்றிக் கவலைப்படாது இருப்பது வருந்துவதற்குரியது என்று உரோமையிலிருந்து செயல்படும் ஒரு நிறுவனத்தின் தலைவர் ஜாக்ஸ் டியூப் கருத்து வெளியிட்டார் .








All the contents on this site are copyrighted ©.