இவ்வாண்டின் ஜுன் மாதம் வத்திக்கான் திருப்பீடத்தின் குடும்ப நல மன்றத்தின் தலைவராகப்
பொறுப்பேற்றுள்ளார் இத்தாலியைச் சேர்ந்த கர்தினால் எண்ணியோ அந்தோனெல்லி . குடும்ப வாழ்வு
பற்றிய கருத்தரங்கு அடுத்து வரும் ஜனவரி 14 – 18 தேதிகளில் மெக்சிக்கோ நாட்டில் நடக்க
உள்ளது . உலகமெங்கிருந்தும் 15,000 பேர் இதில் கலந்து கொள்ள உள்ளனர் . அது சமயம் 17-18
தேதிகளில் அங்கு நடக்கும் குவாடலூப் மாதா விழாவின் போது அத்திருத்தலத்துக்கு 10 இலட்சம்
பேர் வருகை தர உள்ளனர் . குடும்பங்களைக் கட்டி எழுப்ப வேண்டும் எனவும் கிறிஸ்தவக் குடும்பங்கள்
பிறருக்கு நல் வாழ்வுக்கு வழி காட்ட வேண்டும் எனவும் கர்தினால் எண்ணியோ அந்தோனெல்லி கூறினார்
. மணமுறிவுக்குப்பின் முறையில்லாது குடும்பம் நடத்துபவர்களுக்கு வத்திக்கானின் குடும்ப
நல வாரியம் துணை செய்ய விழைவதாகவும் கர்தினால் கூறினார் .