2008-09-18 19:51:18

வத்திக்கானுக்கான போஸ்னியா நாட்டுத்தூதர் திருத்தந்தையைச் சந்தித்தித்தார் . 180908 .


போஸ்னியா நாட்டின் வத்திக்கானுக்கான புதிய தூதர் திருத்தந்தையை அவரது காஸ்டல் கண்டால்போ மாளிகையில் சந்தித்து அவருடைய சான்றிதல்களை வழங்கினார் . போஸ்னியா ஹெர்செகோவினா நாட்டின் வத்திக்கானுக்கான புதிய தூதர் திருமதி ஜாஸ்னா கிரிவோசிக் என்பவராவார் . அவரை வரவேற்ற திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அந்நாட்டுத் தலைவருக்கும் குடிமக்களுக்கும் வாழ்த்துச் செய்தி வழங்கி அந்நாட்டு மக்களுக்காகச் செபிப்பதாகக் கூறினார் . வத்திக்கான் திருப்பீடத்தின் அகில உலகத் தூதரகச் சேவை தனிமனிதனுக்குள்ள இறை அழைப்பை மதித்து நீதியுள்ள சமுதாயம் அமைத்திடப் பணி செய்வதாகத் திருத்தந்தை கூறினார் . திருச்சபை மனித மாண்பைக்காத்து பொது நலச்சேவைபுரிய விழைவதாகவும் அவர் கூறினார் . தொடக்கத்தில் திருத்தந்தைக்கு வாழ்த்துக்கூறிய திருமதி ஜாஸ்னா கிரிவோசிக் போஸ்னியா ஹெர்செகோவினா நாட்டின் வத்திக்கான் தூதராக நியமனம் பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்து, ஆன்மீகம் மற்றும் நன்னெறிக் கோட்பாடுகளை வழங்கி உலகுக்கு வழிகாட்டும் வத்திக்கான் திருப்பீடத்தின் முக்கியத்துவத்தைப் போற்றி மதிப்பதாக கூறினார் . சிசாக்கில் 1949 ல் பிறந்துள்ள ஜாஸ்னா திருமணமானவர் . 3 மகன்கள் உள்ளனர் . ஆங்கிலம் , பிரெஞ்ச் , இத்தாலியன் , மற்றும் ஜெர்மன் மொழிகளில் பேசும் திறமையுள்ளவர் .








All the contents on this site are copyrighted ©.