மணவாழ்வைச் சமுதாயம் பாதுகாக்க வேண்டும் என்கிறார் கர்தினால் . 180908 .
குடும்ப வாழ்வில் அன்னை மரியாள் என்ற 19 ஆவது ஆண்டுவிழா ஸ்பெயின் நாட்டின் தோரேசூதாத்
என்ற திருத்தலத்தில் கொண்டாடப்பட்டது. திருப்பலியை வழிநடத்தி மறையுரை ஆற்றிய தொலேதோ மறைமாவட்டப்
பேராயர் கர்தினால் அந்தோனியோ கனிசாரஸ் இல்லறத்தின் மேன்மையைச் சமுதாயம் போற்றிப் பாதுகாக்க
வேண்டும் எனக்கூறினார் . இல்லற வாழ்வின் தேவைகளையும் மதிப்பீடுகளையும் விதி விலக்கு இல்லாது
எல்லோரும் ஊக்குவித்து அதனை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கூறினார் கர்தினால் . மேலும்
நவீன அன்புக்கலாச்சாரத்தின் அடிப்படையும் அதன் மையமும் இல்லறம் என்றும் கர்தினால் கனிசாரஸ்
கூறினார் .