பொலிவியாவில் அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களுடன் இடம்பெறும் வன்முறைகளை முடிவுக்குக்
கொண்டுவரும் நோக்குடன் இருதரப்பினரிடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு நடுநிலையாளர்களாகச்
செயல்பட தலத்திருச்சபை தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
செப். 19ந்தேதியை நாட்டின்
அமைதிக்கான ஜெப நாளாக ஏற்கனவே அறிவித்திருந்த பொலிவிய ஆயர்கள், அமைதிக்கான முயற்சிகளை
தீவிரமாக ஊக்குவித்து வருகின்றனர்.