2008-09-16 14:48:47

கேரளாவில் ஆலயம் மீது தாக்குதல், பாதுகாப்பு தீவிரம்


செப்.16, 2008. மங்களூருக்கு அருகிலுள்ள கேரளாவின் காசர்கோட் மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ ஆலயம் இத்திங்கள் இரவு தாக்கப்பட்டுள்ளதையடுத்து அம் மாவட்டத்திலுள்ள வழிபாட்டுத் தலங்களுக்குப் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது கேரள அரசு.

கோட்டமணி சாலையிலுள்ள புனித வளனார் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு வருவதையொட்டி செபம் நடத்தப்பட்டு வரும் ஜெய் மாதா பள்ளி ஜன்னல்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்று காவல் துறை கூறியது.

மேலும் இஞ்ஞாயிறன்று மங்களூர் பகுதியில் ஏறத்தாழ 14 ஆலயங்களும் செப அறைகளும் தாக்கப்பட்டிருக்கினறன.

இன்னும், தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் பெந்தகோஸ்தே சபை ஆலயம் மீது இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக இரு பிரமுகர்களை காவல்துறை கைது செய்துள்ளது என ஊடகங்கள் கூறுகின்றன.

பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் வெங்கமேட்டில் பெந்தகோஸ்து சபையின் தேவாலயத்தை அடையாளம் தெரியாத சிலர் உள்ளே நுழைந்து பாதிரியார் ஜெயராஜை அடித்து உதைத்தனர். பின்னர் கண்ணாடிகளை உடைத்தனர். ஜெயராஜின் மோட்டார் சைக்கிளும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.