உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் பிரசன்னமாய் இருக்கும் கடவுளின் அதிசயங்களை
எடுத்துச் சொல்லுங்கள் - திருத்தந்தை
செப்.15, 2008. திருநற்கருனை பவினியின் இறுதியில் திருத்தந்தை ஆற்றிய உரை, இயேசு மனிதர்
மீது வைத்துள்ள அளவற்ற அன்பை எடுத்துரைப்பதாய், அவரிடம் செபிப்பதாய் இருந்தது.
ஆண்டவராகிய
இயேசுவே, உம்மை அன்பு செய்கிறோம். உமது அன்பில் வளருவதற்கான வழிகளைத் தேடுகிறோம். எங்கள்
துன்பத்திலும் இன்பத்திலும் உமது அன்பில் எங்களை ஏற்றுக் கொள்ளும். புனித கன்னி மரியே
உமது திருமகனை அன்பு செய்ய உதவும். திருஅப்பத்தை நாம் தியானிக்கும் போது இயேசு கிறிஸ்துவின்
மறு உருவான அவரது உயிர்த்த உடல் பற்றித் தியானிக்கிறோம். திருநற்கருனை வரவிருக்கும் இயேசு
கிறிஸ்துவாகவும் இருக்கின்றது. கிறிஸ்து நம்மில் வாழும் போது, நமக்கு வேறென்ன தேவை. நமக்கு
என்ன குறைபடுகிறது. அன்பு சகோதர சகோதரிகளே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஆராதிப்பதில்
தொடர்ந்து நிலைத்திருங்கள். அமைதியில் நிலைத்திருந்து பின்னர் உலகுக்கு அறிவியுங்கள்.
நாம் அறிந்திருக்கும் ஒன்று பற்றி மௌனம் காக்க முடியாது. உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு
தருணத்திலும் உலகின் ஒவ்வொரு இடத்திலும் பிரசன்னமாய் இருக்கும் கடவுளின் அதிசயங்களை அகில
உலகுக்கும் எடுத்துச் சொல்லுங்கள் எனறுரைத்து இவ்வுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.