முந்நாள் திருத்தந்தை 6 ஆம் பவுலின் பெருமைக்கு வரலாறு சான்று பகர்வதாகத் திருத்தந்தை
16 ஆம் பெனடிக்ட் கூறுகிறார் . 120908
காலம் சென்ற முந்நாள் திருத்தந்தை 6 ஆம் பவுல் 06 ஆகஸ்ட் 1978 ஆம் ஆண்டு காலமானார் .
அவரது 30 ஆம் ஆண்டின் நினைவஞ்ஞலியை ஒட்டி திருத்தந்தை இத்திங்கள் செய்தி வெளியிட்டார்
. இத்தாலியின் பிரேசியா மறைமாவட்டத்தில் திருத்தந்தை 6 ஆம் பவுல் பிறந்தார் .அவருடைய
இயற்பெயர் ஜொவான்னி பாட்டிஸ்டா மொன்டீனி என்பதாகும் . அம்மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயர்
லூசியானோ மோனாரிக்கு இத்திங்கள் அனுப்பிய மடலில் காலம் செல்லச் செல்ல திருத்தந்தை 6 ஆம்
பவுல் திருச்சபைக்கு ஆற்றிய அரும்பணிகள் உலகுக்குத் தெரிய வருவதாகத் திருத்தந்தை 16 ஆம்
பெனடிக்ட் எழுதியிருந்தார் . கிறிஸ்தவர்களுக்கும் உலகுக்கும் அவர் விலைமதிப்பில்லாத புண்ணிய
வழிகளையும் போதனைகளையும் விட்டுச்சென்றுள்ளார் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார் . அவர்
திருப்பணி ஆற்றிய காலத்தில் பல சவால்களையும் பிரச்சனைகளையும் சந்தித்ததாகவும் மறைபோதக
ஆர்வத்தால் தொலைதூரப் பயணங்களை மேற்கொண்டதாகவும் போற்றுதற்குரிய திருச்சபைப் பணி, நற்செய்திப்பணி,
கிறிஸ்தவ சமய ஐக்கியப் பணி ஆகியவைகளை அழியாத சின்னங்களாக விட்டுச் சென்றுள்ளார் என்றும்
திருத்தந்தை கூறியுள்ளார் .