2008-09-12 21:50:55

முந்நாள் திருத்தந்தை 6 ஆம் பவுலின் பெருமைக்கு வரலாறு சான்று பகர்வதாகத் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் கூறுகிறார் . 120908


காலம் சென்ற முந்நாள் திருத்தந்தை 6 ஆம் பவுல் 06 ஆகஸ்ட் 1978 ஆம் ஆண்டு காலமானார் . அவரது 30 ஆம் ஆண்டின் நினைவஞ்ஞலியை ஒட்டி திருத்தந்தை இத்திங்கள் செய்தி வெளியிட்டார் . இத்தாலியின் பிரேசியா மறைமாவட்டத்தில் திருத்தந்தை 6 ஆம் பவுல் பிறந்தார் .அவருடைய இயற்பெயர் ஜொவான்னி பாட்டிஸ்டா மொன்டீனி என்பதாகும் . அம்மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயர் லூசியானோ மோனாரிக்கு இத்திங்கள் அனுப்பிய மடலில் காலம் செல்லச் செல்ல திருத்தந்தை 6 ஆம் பவுல் திருச்சபைக்கு ஆற்றிய அரும்பணிகள் உலகுக்குத் தெரிய வருவதாகத் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் எழுதியிருந்தார் . கிறிஸ்தவர்களுக்கும் உலகுக்கும் அவர் விலைமதிப்பில்லாத புண்ணிய வழிகளையும் போதனைகளையும் விட்டுச்சென்றுள்ளார் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார் . அவர் திருப்பணி ஆற்றிய காலத்தில் பல சவால்களையும் பிரச்சனைகளையும் சந்தித்ததாகவும் மறைபோதக ஆர்வத்தால் தொலைதூரப் பயணங்களை மேற்கொண்டதாகவும் போற்றுதற்குரிய திருச்சபைப் பணி, நற்செய்திப்பணி, கிறிஸ்தவ சமய ஐக்கியப் பணி ஆகியவைகளை அழியாத சின்னங்களாக விட்டுச் சென்றுள்ளார் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.