பராகுவே நாட்டின் ஆயர் குழு வியாழன் நண்பகலில் திருத்தந்தையை காஸ்டல் காண்டால்போ மாளிகையில்
சந்தித்தனர் . அவர்கள் அனைவரும் வழக்கமான அத்லீமினா சந்திப்புக்கு வந்திருந்தனர். இன்று
காலை அவர்களை வரவேற்ற திருத்தந்தை ஆயர்கள் என்ற பொறுப்பில் அவர்கள் பராகுவே கத்தோலிக்கர்களை
நற்செய்தி மற்றும் மறைபரப்புப் பணியில் ஊக்குவிப்பதற்குக் கொண்டுள்ள திட்டங்களைத் திருத்தந்தை
பாராட்டினார் . ஆயர்கள் பராகுவே நாட்டில் எதிர்கொள்ளும் சவால்கள் கடினமானவை எனக்கூறிய
திருத்தந்தை கடவுளை ஒதுக்கிவிட்டு மகிழ்ச்சிக்கு கடவுள் தடையாக இருப்பதாகக் கூறும் மக்கள்
நடுவில் கிறிஸ்துவின் மீட்பின் நற்செய்தியைப் அறிவிப்பதும் கிறிஸ்துவை அவர்கள் வாழ்வில்
மையப்படுத்துவதும் எளிதானதல்ல என்று கூறினார் திருத்தந்தை . பராகுவே ஆயர்கள் அவர்களுடைய
புனித வாழ்வாலும் , விசுவாசப் பற்றுறுதியாலும், திருச்சபையோடு இணைந்திருப்பதாலும் அங்கு
வாழும் கிறிஸ்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்குமாறு திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்
அவர்களை ஊக்குவித்தார் .