2008-09-11 18:54:45

பராகுவே ஆயர்கள் திருத்தந்தையைச் சந்தித்தனர். 11,செப்.-08 .


பராகுவே நாட்டின் ஆயர் குழு வியாழன் நண்பகலில் திருத்தந்தையை காஸ்டல் காண்டால்போ மாளிகையில் சந்தித்தனர் . அவர்கள் அனைவரும் வழக்கமான அத்லீமினா சந்திப்புக்கு வந்திருந்தனர். இன்று காலை அவர்களை வரவேற்ற திருத்தந்தை ஆயர்கள் என்ற பொறுப்பில் அவர்கள் பராகுவே கத்தோலிக்கர்களை நற்செய்தி மற்றும் மறைபரப்புப் பணியில் ஊக்குவிப்பதற்குக் கொண்டுள்ள திட்டங்களைத் திருத்தந்தை பாராட்டினார் . ஆயர்கள் பராகுவே நாட்டில் எதிர்கொள்ளும் சவால்கள் கடினமானவை எனக்கூறிய திருத்தந்தை கடவுளை ஒதுக்கிவிட்டு மகிழ்ச்சிக்கு கடவுள் தடையாக இருப்பதாகக் கூறும் மக்கள் நடுவில் கிறிஸ்துவின் மீட்பின் நற்செய்தியைப் அறிவிப்பதும் கிறிஸ்துவை அவர்கள் வாழ்வில் மையப்படுத்துவதும் எளிதானதல்ல என்று கூறினார் திருத்தந்தை . பராகுவே ஆயர்கள் அவர்களுடைய புனித வாழ்வாலும் , விசுவாசப் பற்றுறுதியாலும், திருச்சபையோடு இணைந்திருப்பதாலும் அங்கு வாழும் கிறிஸ்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்குமாறு திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களை ஊக்குவித்தார் .








All the contents on this site are copyrighted ©.