2008-09-11 20:27:11

ஆந்திராவில் கிறிஸ்தவர்களின் உரிமைக் குரல்.11 செப்.


ஆந்திரப் பிரதேசத்தின் சிறுபான்மை மதத்தவரின் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்த அம்மாநிலத்தின் அனைத்துக் கிறிஸ்தவர்களையும் உள்ளடக்கிய ஆந்திரக் கிறிஸ்தவர்களின் கூட்டமைப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது . பிற்படுத்தப் பட்ட சமூகத்தினருக்கு வழங்கப்படும் அரசுச் சலுகைகள் அதே சமூகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படுவதில்லை எனக் கூறும் இத்தீர்மானம் , கிறிஸ்தவப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் அரசு மானியம் குறைப்பு , சிறுபான்மை நிறுவனங்களை அவ்வாறு அங்கீகரிக்க மறுத்தல் போன்றவைகளையும் சுட்டிக்காட்டியுள்ளது . இதற்குக் காரணம் ஆந்திர அரசில் உள்ள சில கிறிஸ்தவர்களுக் கெதிரான விரோதிகளே எனவும் குற்றம் சாட்டுகிறது கிறிஸ்தவக் கூட்டமைப்பின் அறிக்கை. வரும் மாதம் ஆந்திர முதல்வரைச் சந்தித்து தங்கள் குறைபாடுகளை எடுத்துரைக்க உள்ளதாக இக் கூட்டமைப்புக் கூறுகிறது .








All the contents on this site are copyrighted ©.