பெண்கள் உயிரோடு புதைக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் திருச்சபை அதிர்ச்சி
செப்.9, 2008 பாகிஸ்தானின் பாலோகிஸ்தான் மாகாணத்தில் பூர்வீக இனத்தவர் தங்கள் இனத்தின்
கௌரவத்தைக் காப்பாற்றும் நோக்கத்தில் 5 பெண்களை உயிரோடு புதைத்திருப்பது குறித்து அந்நாட்டு
கத்தோலிக்க மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபையினர் தங்களது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளனர்.
இந்நிகழ்வு
குறித்து கண்டனம் தெரிவித்த அருட்திரு மாக்சூத் நசீர், இது முற்றிலும் மனிதத் தன்மையற்றது,
இது இருண்ட கால நடவடிக்கைகளை நினைவுபடுத்துகின்றது என்றார்.
தங்கள் இனத்தை விட்டு
வேறோர் இன ஆண்களைத் திருமணம் செய்ய விரும்பியதால் 5 பெண்களை சுடப்பட்டு உயிரோடு புதைக்கப்பட்டுள்ளனர்
என்று ஊடகங்கள் ௬றுகின்றன