2008-09-09 15:10:44

சமூக இணையதள தொடர்பகத்திற்கு வரலாற்றில் முதன்முறையாக ஒரு திருத்தந்தை வாழ்த்து


செப்.9, 2008 சமூக இணையதள தொடர்பகத்திற்கு வரலாற்றில் முதன்முறையாக ஒரு திருத்தந்தை வாழ்த்து தெரிவித்துள்ளர்.

க்றைஸ்ட்3.காம் என்ற இணைய தளத்தின் 35,000 உறுப்பினர்களுக்கு அன்னைமரியின் பிறந்த நாள் விழா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளர் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட்.

கடந்த ஜூலையில் சிட்னியில் நடைபெற்ற உலக இளையோர் தினம் மற்றும் முந்தைய உலக இளையோர் தினங்களில் பங்கு பெற்றவர்களுக்கென உருவாக்கப்படடுள்ள இவ்விணைய தள உறுப்பினர்களுக்கென வாழ்த்து தெரிவித்துள்ளர் அவர்.

க்றைஸ்ட் என்பது கிறிஸ்துவையும் 3 என்பது மூன்றாம் மில்லேனேயத்தையும் குறிக்கின்றது.

மரியாவின் உணர்வு மற்றும் தைரியத்தால் உந்தப்பட்டு உங்களின் விசுவாசப்பயணம் திருச்சபையின் வாழ்வை உயிரூட்டம் பெறச் செய்யட்டும் என்று உலக இளையோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

மேலும், லூர்து நகரில் அன்னைமரியா காட்சி கொடுத்ததன் 150 ஆம் ஆண்டையொட்டி வருகிற வெள்ளி முதல் திங்கள் வரை அவர் பிரான்சுக்கு மேற்கொள்ளவிருக்கின்ற திருப்பயணம் பற்றியும் அதில் குறிப்பிட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.