2008-09-09 15:07:53

கர்தினால் பெல் 12 வது உலக ஆயர் மன்றத்தின் தலைவர் பிரதிநிதி


செப்.9, 2008 வருகிற அக்டோபர் 5 முதல் 26 வரை வத்திக்கானில் நடைபெறும் 12 வது உலக ஆயர் மன்றத்தின் தலைவர் பிரதிநிதியாக சிட்னி பேராயர் கர்தினால் ஜார்ஜ் பெல்லை இன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட்

நியமித்துள்ளார் திருத்தந்தை.

இவ்வுலக ஆயர் மன்றத்ததின் தலைவர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருந்த மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் இப்பணியை செய்ய இயலாத காரணத்தினால் அவர் இடத்திற்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி பேராயர் கர்தினால் ஜார்ஜ் பெல்லை நியமித்துள்ளார் திருத்தந்தை

12 வது உலக ஆயர் மன்றத்தின் மூன்று தலைவர் பிரதிநிதிகளில் திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுத் தலைவர் கர்தினால் வில்லியம் ஜோசப் லெவாதா, பிரேசில் நாட்டு சா பவுலோ பேராயர் கர்தினால் ஒதிலோ பேத்ரோ ஸ்கேரர் ஆகியயோர் மற்ற இருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சபையின் வாழ்விலும் பணியிலும் இறைவார்த்தை என்ற தலைப்பில் நடைபெறும்

இவ்வுலக ஆயர் மன்றத்தை வருகிற அக்டோபர் 5ம் தேதி புனித பவுல் பசிலிக்காவில் திருப்பலி நிகழ்த்தித் தொடங்கி வைப்பார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.