கீழைத் திருச்சபைகளுக்கான வத்திக்கான் திருப்பீட வாரியத்தின் தலைவர் கர்தினால் லெயோனார்டோ
சாணட்ரி அவருடைய சொந்த நாடான அர்ஜென்டீனாவில் பயணம் மேற்கொண்டுள்ளார் . அங்குள்ள மார்டெல்
பிளாட்டா நகரில் தூய பேதுரு செசிலியா ஆலயத்தில் திருப்பலி நிகழ்த்தினார் . திருப்பலியின்
தொடக்கத்தில் மார்டெல் பிளாட்டாவின் ஆயர் மேதகு ஜுவான் ஆல்பர்ட்டோ புயிகாரி அந்தத் திருப்பலி
நன்றித் திருப்பலி என்றார் . கர்தினால் சாண்ட்ரோவுக்காகவும் கடைசி நான்கு திருத்தந்தையர்களுக்காகவும்
நன்றிப்பலி என்றார் . கர்தினால் அவருடைய மறையுரையின் போது ஆண்டவர் அனைவரையும் அவரது சாட்சிகளாக
வாழ , சீடர்களாக வாழ அழைப்புவிடுப்பதாகக் கூறினார் .