வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களுக்கு காப்போர்டு அமைப்பு உதவி
செப். 03 இந்தியாவின் பீஹாரில் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களுக்கான
அவசரகால நிவாரண உதவிகளுக்கென 50 ஆயிரம் பவுண்டுகள் பணத்தை அனுப்பியுள்ள்து பிரிட்டன்
காப்போர்டு அமைப்பு.
இந்திய காரித்தாஸ் அமைப்போடு சேர்ந்து வேலை செய்யும் காப்போர்டு
அமைப்பின் இந்தியாவுக்கான நிர்வாகி மேரி லூக்காஸ் பேசுகையில், வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட
கிராம மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு வருவது தற்போதைய அவசர உதவியாகச் செய்யப்பட
வேண்டும், அதோடு உணவு, மருத்துவ மற்றும் குடியிருப்பு உதவிகளும் தேவைப்படுகின்றன என்றார்.
நேபாளம்
வழியாக பீஹாரில் பாயும் கோஷி ஆற்றின் அணை ஆகஸ்ட் 18ம் தேதி உடைந்ததில் வெள்ளம் கரை புரண்டோடத்
தொடங்கியதையடுத்து இந்தியாவின் மிக ஏழை மாநிலங்களில் ஒன்றான பீஹாரின் 16 மாவட்டங்கள்
பாதிக்கப்பட்டுள்ளன. 25 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். 500க்கும்
மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்று ஊடகங்கள் ௬றுகின்றன.
நேபாளத்திலும் 70 ஆயிரம்
பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.