ஒரிசாவில் அமைதி நிலவ அழைப்பு - அன்னை தெரேசா சபை அதிபர் அருட்சோதரி நிர்மலா.
செப். 03 சமயம் என்பது அன்பின் பணி செய்வதற்காக இருப்பது என்று சொல்லி ஒரிசாவில் அமைதி
நிலவ அழைப்பு விடுத்துள்ளார் அன்னை தெரேசா சபை அதிபர் அருட்சோதரி நிர்மலா.
இந்தியாவிலும்
உலகிலும் அன்பின் கலாச்சாரத்தைக் கட்டி எழுப்புவதற்கென முத்தி பெற்ற அன்னை தெரேசாவின்
வழியைப் பின்பற்றி வெறுப்பு மற்றும் வன்முறை ஆயுதங்களைக் கைவிடுவோம், ஒருவரையொருவர் அன்பு
செய்வோம் என்று அருட்சோதரி நிர்மலா மேலும் கேட்டுக் கொண்டார்.
சமயம் என்பது அன்பின்
பணி செய்வது, அமைதியையும் ஒன்றிப்பையும் அழிப்பதற்காக இருப்பது அல்ல சமயம் என்றுரைத்த
அருட்சோதரி நிர்மலா, கடவுள் பெயரால், துன்புறும் ஏழைச் சிறார் பெயரால், உணர்வற்ற இவ்வன்முறைக்குப்
பலியாகியுள்ள சகோதர சகோதரிகள் பெயரால் அமைதிக்கு அழைப்பு விடுப்பதாக ௬றினார்.