2008-09-02 15:00:43

துன்புறும் இந்திய கிறிஸ்தவர்களுக்காக செபம், உண்ணா நோன்பு – இத்தாலிய திருச்சபை


செப்.02 இந்தியாவில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுடன் ஆன்மீக ரீதியில் அருகில் இருந்து அவர்களுடன் தோழமை உணர்வை வெளிப்படுத்தும் விதமாக ஒரு நாள் செபம் மற்றும் உண்ணா நோன்பு அனுசரிப்பதற்கு இத்தாலிய ஆயர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியாவில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்தும் விதமாக இத்தாலிய கத்தோலிக்கர்கள் அன்னை தெரேசாவின் நினைவு நாளான செப்டம்பர் 5ஆம் தேதி செபம் மற்றும் உண்ணா நோன்பு அனுசரிக்குமாறு கேட்டுள்ளனர் ஆயர்கள்.

ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம் பெறும் வன்முறைகளினால் குருக்கள், துறவிகள் மற்றும் பொது நிலை விசுவாசிகள் இறந்துள்ளனர், ஆலயங்கள், மருத்துவமனைகள், வீடுகள் மற்றும் கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன, திருத்தந்தை 16ஆம் பெனடிக்டும் இவ்வன்முறையைக் கண்டித்துள்ளார், அமைதிக்கும் நல்லிணக்கத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளார் என்றும் இத்தாலிய ஆயர் பேரவையின் அறிக்கை ௬றுகிறது.








All the contents on this site are copyrighted ©.