திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களின் சிந்தனைகளைப் பரப்புவதற்கென அமைப்பு ஒன்றை உருவாக்குதற்குத்
திட்டமிடப்பட்டுள்ளது
செப்.02 திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களின் சிந்தனைகளைப் பரப்புவதற்கென அமைப்பு
ஒன்றை உருவாக்குதற்குத் திட்டமிட்டுள்ளனர் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட்டின் முன்னாள்
மாணவர் வட்டம்.
ராட்சிங்கர் மாணவர் அமைப்பு என்ற திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட்டின்
முன்னாள் மாணவர்கள் காஸ்தெல் கண்டோல்போவில் கடந்த சனிக்கிழமை அவரோடு நடத்திய ஆண்டுக்
௬ட்டத்தின் இறுதியில் இத்திட்டம் வெளியிடப்பட்டது. இந்த 30வது ௬ட்டத்தில் சுமார் 40 பேர்
கலந்து கொண்டனர்.
பேராசரியர் ஜோசப் ராட்சிங்கர் மியூனிக் பேராயராக நியமிக்கப்பட்டு
பின்னர் 1977ல் கர்தினாலாக உயர்த்தப்பட்ட பின்னர் அவரது மாணவர்கள் ஆண்டு தோறும் அவரோடு
சேர்ந்து ௬ட்டம் நடத்தி வருகின்றனர்.