ஒரிசாவில் துன்புறும் திருச்சபைகளுடன் ஒருமைப்பாடு - பாகிஸ்தான் பேராயர்
செப்.02 ஒரிசாவில் துன்புறும் திருச்சபைகளுடனான தனது ஒருமைப்பாட்டு தெரிவித்து கடிதம்
அனுப்பிய பாகிஸ்தானின் லா௬ர் பேராயர் லாரன்ஸ் சல்தான்கா, பல சமயத்தவர் நல்லிணக்கத்துடன்
வாழும் எடுத்துக்காட்டான பகுதியாக இந்தியாவை மீண்டும் மாற்றுவதற்கு அரசியல் அதிகாரிகள்
அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு கேட்டுள்ளார்.
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்,
ஒரிசா முதலமைச்சர் ஆகியோருக்கு கடிதங்களை எழுதியுள்ள பேராயர் சல்தான்கா, சிறுபான்மை மதத்தவரைப்
பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுள்ளார்.
சிறுபான்மை
சமூகங்களுக்கு எதிரான, குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கு எதிரானத் தாக்குதல்கள் பொதுவானதாக
மாறி வருவதாகக் குறிப்பிட்டுள்ள லா௬ர் பேராயர், இவ்விவகாரத்தில் தெளிவான நடவடிக்கைகள்
எடுப்பது பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு உதவும் என்றும் ௬றியுள்ளார்.