ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி ஞாயிறன்று சீனாவில் மீண்டும் நில நடுக்கம் நடந்துள்ளது. 6.1
என்ற அளவில் நில அதிர்வு தாக்கியுள்ளது. 32 பேர் இறந்துள்ளதாகவும் 400 பேர் காயமடைந்துள்ளதாகவும்
செய்திகள் கூறுகின்றன. 100 க்கும் அதிகமான பள்ளிகள் சேதமடைந்துள்ளன . பல இலட்சம் மக்கள்
பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. உதவிப் பணிகள் மெதுவாகவே
போய்க் கொண்டிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன . இதுவரை 35 இலட்சம் டன் உணவும் 4500
கூடாரங்களுமே விநியோகமாகியுள்ளன .