2008-09-01 19:19:10

ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகத் தொடரும் வன்முறை . 010908.


ஒரிசாவில் கிறிஸ்தவர்களின் சாவு எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது . இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஒரிசாவின் முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் தொடர்பு கொண்டு ஒரிசாவின் கிறிஸ்தவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாகச் செய்யுமாறு கூறியுள்ளார். நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் எனப் பிரதமர் கூறியுள்ளார் . ஒரிசாவின் காவலர்கள் சரியாகச் செயல்பட அரசின் ஒத்துழைப்பு அதற்குக் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஒரிசாவின் தீவிரவாத இந்து இயக்கத்தினர் ஒரிசாவைவிட்டு கிறிஸ்தவர்களை வெளியேற்றுவோம் எனச் சூளுரைத்துக்கொண்டு ஆயுதங்களோடு நடமாடிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.








All the contents on this site are copyrighted ©.