ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகத் தொடரும் வன்முறை . 010908.
ஒரிசாவில் கிறிஸ்தவர்களின் சாவு எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது . இந்தியப் பிரதமர் மன்மோகன்
சிங் ஒரிசாவின் முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் தொடர்பு கொண்டு ஒரிசாவின் கிறிஸ்தவர்களுக்குத்
தேவையான உதவிகளை உடனடியாகச் செய்யுமாறு கூறியுள்ளார். நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவர அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் எனப் பிரதமர் கூறியுள்ளார் . ஒரிசாவின்
காவலர்கள் சரியாகச் செயல்பட அரசின் ஒத்துழைப்பு அதற்குக் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ஒரிசாவின் தீவிரவாத இந்து இயக்கத்தினர் ஒரிசாவைவிட்டு கிறிஸ்தவர்களை வெளியேற்றுவோம் எனச்
சூளுரைத்துக்கொண்டு ஆயுதங்களோடு நடமாடிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.